பத்ம விருதுகள் : தன்னிகரற்ற சேவையாளர்களை பரிந்துரைக்க பிரதமர் வேண்டுகோள்

சமுதாயத்தின் அடிமட்ட அளவில் தன்னிகரற்ற சேவைகளைச் செய்து பெரிதும் பிரபலம் அடையாதவர்களை மக்களின் பத்ம விருதுக்கு பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
2022 – ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படவிருக்கும் பத்ம விருதுகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள், பரிந்துரைகளை 2021 செப்டம்பர் 15 வரை பொதுமக்கள் அனுப்பலாம்.
1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகியவை ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, வர்த்தகம் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், மக்கள் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகள், சேவைக்காக இவை வழங்கப்படுகின்றன.