கதிரியக்கமற்ற
ஹீலியம் – 3 தனிமத்தைப் பிரித்தெடுப்பதற்காக நிலவில் ஆய்வு மையத்தை இந்தியா அடுத்த
10 ஆண்டுகளில் அமைக்க உள்ளது.
முதுபெரும்
வழக்குரைஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜேத்மலானி 2019 செப்டம்பர் 8 அன்று
காலமானார். இவர் அடல்பிகாரி வாஜ்பாய் ஆட்சிக்
காலத்தின் போது மத்திய சட்டத்துறை அமைச்சராகவும், 2010-இல் உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள்
சங்கத்தின் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
US-ஓபன்
டென்னிஸ் போட்டியின் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவில் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸை
(அமெரிக்கா) வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று வரலாறு படைத்தார்
கனடாவின் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரிஸ்கு. அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் டனில் மெட்விடேவை
(ரஷ்யா) வீழ்த்தி 19-ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றார் ஸ்பெயின் வீரர் ரஃபேல்
நடால்.
தெலங்கானா
மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் 2019 செப்டம்பர் 8 அன்று பதவியேற்றார். அவருக்கு
தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எஸ்.சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சூரிய
மண்டலம் தொடர்பான ஆராய்ச்சியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் (இஸ்ரோ) இணைந்து
பணியாற்றப் போவதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
பயிர்களின்
நோய்த்தொற்றை ஆரம்பக் கட்டத்திலேயே எளிதாக, துல்லியமாக கண்டறியவும் அதை சரிசெய்யவும்
இயற்கை விவசாய வழிமுறைகளை உள்ளடக்கிய ‘நம்மாழ்வார் என்ற தொழில்நுட்ப செயலியை திண்டுக்கல்
எஸ்.எஸ்.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.