ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனி விமானம் மூலம் புது தில்லியில் இருந்து லே பகுதிக்கு 12-8-2014 செவ்வாய்க்கிழமை காலை சென்றடைந்தார்.
இந்தப் பயணத்தின் போது கார்கில் மற்றும் சியாச்சின் நகருக்குச் செல்லும் அவர் லடாக்கில் லே மாவட்டம் மற்றும் கார்கில் பகுதிகளுக்கு சென்று பார்வையிடுகிறார். மேலும் கார்கில் மாவட்டத்தில் 44 மெகாவாட் நீர் மின் உற்பத்தி திட்டத்தையும் லெஹ்இல் 45 மெகாவாட் நீர் மின் உற்பத்தி திட்டத்தையும் சேர்த்து 2 மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் லாக் மற்றும் கார்கில் பகுதிகளில் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.