காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசு – முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசு  – முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பரிசுத் தொகைக்கான காசோலைகளை 11-8-2014 அன்று நேரில் வழங்கி பாராட்டினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் சதீஷ் சிவலிங்கம், ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகள் தீபிகா பள்ளிக்கல், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளும், டேபிள் டென்னிசில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷரத் கமல், அந்தோணி அமல்ராஜ் மற்றும் ஹாக்கியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரூபிந்தர் பால் சிங், ஸ்ரீஜேஷ் ஆகியோருக்கு தலா 30 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளும் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரர்கள், தமிழக அரசின் ஊக்கத்தால் தொடர் வெற்றிகளைக் குவிப்போம் என நம்பிக்கை தெரிவித்தனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x