குரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

குரூப் 2 முதன்மைத் தேர்வு எழுதும் தேர்வர்கள் கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே சான்றிதழ்களை பதிவேற்றவும் கடைசி வாய்ப்பாகும். இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-



குரூப் 2-இல் அடங்கிய பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிந்த நிலையில், முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 10-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு முன்பாக அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், முதல் நிலை எழுத்துத் தேர்வுக்குக் கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மைத் தேர்வுக்கான கட்டணமான ரூ.150-ஐ தேர்வாணைய இணையத்தில் (‌w‌w‌w.‌t‌n‌p‌s​c‌e‌x​a‌m‌s.‌n‌e‌t) மட்டுமே வரும் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்பாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் தேர்வர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்துள்ளார்.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x