இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை 2019 – 2020

இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை 2019 – 2020

2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 பிப்ரவரி 1 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக 2019-20-ஆம் நிதியாண்டுக்கான 2 பாகங்கள் அடங்கிய பொருளாதார ஆய்வறிக்கையை ஜனவரி 31 அன்று அவர் தாக்கல் செய்தார். 755 பக்கங்கள் கொண்ட இந்த வருடாந்திர ஆய்வறிக்கையில் பொருளாதார முன்னேற்றங்கள், கடந்த 12 மாதங்களில் அரசு மேற்கொண்ட முக்கிய வளர்ச்சி திட்டங்களின் செயல் திறன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வளத்தை உருவாக்குவதை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் உருவாக்கியுள்ளார்.

 இந்த வருடம் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை ஊதா நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த ரூபாய் நோட்டாக 100 ரூபாய் உள்ளது. புதிதாக அச்சிடப்பட்ட 100 ரூபாய் ஊதா நிறத்தில் வெளியிடப்பட்டது. பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக திகழ்வதை வெளிப்படுத்தவே ஊதா நிறம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வளம் சேர்ப்பதை உணர்த்தும் விதமாகவும், முதலீட்டை அறிவுறுத்தும் வகையிலும் இந்த நிறம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு வெளியான பொருளாதார ஆய்வறிக்கை வெளிர்நீல நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தது. ’சிந்தனைகளுக்கு வானமே எல்லை எனப் பொருள்படும்படி வெளிர்நீல நிறம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையில் 4 இடங்களில் திருக்குறள் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

மேற்கோள் காட்டப்பட்ட திருக்குறள் :

’’பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

  எண்ணிய தேயத்துச் சென்று

’’செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

  எஃகதனிற் கூரியது இல்

’’செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

  எச்சத்திற் கேமாப்பு உடைத்து

’’அருவினை என்ப உளவோ கருவியான்

  காலம் அறிந்து செயின்

பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் :

பொருளாதார சீர்திருத்தங்களை துரிதப்படுத்தினால் 2021-இல் நாட்டின் வளர்ச்சி 6 முதல் 6.5 சதவீதமாக அதிகரிக்கும்.

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலையால் 2019-20-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) வளர்ச்சி விகிதம் 4.8ரூ-ஆக இருந்தது.

தற்போது தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (சூளுடீ) முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, இரண்டாவது அரையாண்டில் (2019 அக்டோபர் – 2020 மார்ச்) பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை எட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2019-20 நிதியாண்டில் வரி வருவாய் குறைந்ததால் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ழுனுஞ) அதிகபட்சமாக 3.3 சதவீதம் இருக்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட இலக்கு.

கடந்தாண்டு மொத்த விற்பனை விலைக் குறியீடு 4 சதவீதமாக  இருந்தது. அதே சமயத்தில் நுகர்வோர் விலைக்குறியீடு 7 சதவீதமாக உயர்ந்தது. ஆனால், ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கையின் மூலம் அடிக்கடி மாற்றப்பட்ட வட்டி விகிதக் குறைப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்தது.

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலையாலும், அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் காரணமாகவும் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி கண்டது.

இந்தியாவின் வளர்ச்சியிலும் அரசின் சீர்திருத்தங்களாலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதன் மூலம் வெளிநாட்டு நேரடி முதலீடு 2018-ஆம் ஆண்டைவிட நடப்பாண்டில் அதிகரித்தது.

2019 ஏப்ரல் வரை 24.4 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வந்ததாக குறிப்பிடப்படுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் ஏழைகளுக்கு பாதிப்பில்லாமல் உணவுக்கான மானியங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் வலியுறுத்தப்பட்டது.

பிரதமர் அறிவித்துள்ள, விவசாயிகளுக்கு 2024-25-க்குள் இரண்டு மடங்கு வருமானத்தைக் கொடுக்கும் திட்டத்திற்கு மூன்று விதமான ஆலோசனைகளையும் ஆய்வறிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.

பயிர்க் கடன், நீர்ப்பாசன வசதி, கடன் பெறுவதை எளிமைப் படுத்துதல் போன்ற விவகாரங்களின் மூலம் இந்த நிலையை அடைய முடியும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

2018-19-ஆம் நிதியாண்டில் தொழில்வளர்ச்சி 5 சதவீதமாக இருந்தது. 2019-20 நிதியாண்டில் ஒரு சதவீதம் கூட இல்லாமல் முதல் எட்டு மாதங்களில் 0.6 சதவீதம் தான் இந்த துறையில் வளர்ச்சி ஏற்பட்டது.

இதேபோல உற்பத்தித் துறையில் 2018-19-இல் 4.9 சதவீதமாக இருந்த வளர்ச்சி, ஒரு சதவீதத்துக்கும் கீழாக 0.9 என குறைந்தது. அரசின் இலக்கான 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அடிப்படை வசதிகளை மேம்படுத்த 2020-25-இல் ‘ 102 லட்சம் கோடி முதலீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முதலீடுகளால் கட்டுமானத் துறை வளர்ச்சி அடையும். ஆனால், எத்தகைய முதலீடுகள் தேவை என்பதற்கும் அறிக்கையில் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இன்டர்நெட் ஆட்டோமேஷன் உள்பட பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்துவதின் மூலம் இலக்கை எட்ட முடியும்.