ஸ்புட்னிக்-1, 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் நாள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இது பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட முதலாவது செயற்கைக் கோள் ஆகும்.
விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக்2, லைக்கா என்ற நாயைச் சுமந்து சென்றது. விலங்கொன்றை விண்வெளிக்குக் கொண்டு சென்ற முதலாவது செயற்கைக் கோள் என்ற பெருமையை ஸ்புட்னிக்2, பெற்றது.
ஸ்புட்னிக் 3 தோல்வியுற்றது.