தமிழகத்தில் இந்த ஆண்டில் 12 588 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என பள்ளிக் கல்வித்துறைச் செயலர் சபிதா தெரிவித்துள்ளார்.
அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் கல்வித்துறைக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில், தேர்ச்சி விகிதம், கடந்த ஆண் விட சரிந்துள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.
நான்கு ஆண்டுகளில் காலியாக இருந்த, 76,684 பணியிடங்களில் 53, 288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 1, 267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் நியமிக்கப்படுவர் என்று கூறியுள்ளார்.