டான்செட் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

டான்செட் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு (டான்செட்) விண்ணப்பிக்கும் தேதியை அண்ணா பல்கலைக் கழகம் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை “டான்செட்’ நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.

2015-ஆம் ஆண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வுக்குரிய அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.

எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு 16-5-2015 அன்றும், முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு 17-5-2015 அன்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவு செய்ய ஏப்ரல் 20 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை மையத்தில் நேரடியாகப் பதிவு செய்ய ஏப்ரல் 22-ஆம் தேதி கடைசி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் தேதியை பல்கலைக் கழகம் இப்போது நீட்டித்துள்ளது.

அதன்படி, தேர்வுக்குப் பதிவு செய்ய ஏப்ரல் 25 கடைசித் தேதியாகும். சென்னை மையத்தில் நேரடியாகப் பதிவு செய்ய ஏப்ரல் 29 கடைசித் தேதியாகும்.

இதுகுறித்த விவரங்களை www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணைய தளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.