குரூப் – 2 தேர்வு 6.2 லட்சம் பேர் விண்ணப்பம்

குரூப் – 2 தேர்வு 6.2 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் – 2 தேர்வு எழுத 6.2 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு:ஜூலை 26ல் குரூப் – 2 நேர்முகத் தேர்வுக்குட்பட்ட பதவிக்கான 1,241 காலியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு நடக்கிறது.

இத்தேர்வுக்கு 6.2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர் விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி., இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.