தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணி தேர்விற்கான விண்ணப்பம் நேற்றுமுதல் விநியொகிக்கப்படுகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அரசு பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் பாடப்பிரிவுகள் மற்றும் பொறியியல் அல்லாத பாடப்பிரிவைச் சேர்ந்த 132 காலிப் பணியிடங்களுக்கு இத்தேர்வு நடக்க உள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை செப்-5 வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி செப்-5. விண்ணப்பதார்ர்கள் ஜுலை 1, 2014 அன்று 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை நிரப்பி மாவட்ட முதன்மை கல்வி அலுவல“களில் அளித்து ஒப்புகைச் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு அக்-26ல் நடக்க உள்ளது.