காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்ற இரண்டு தமிழக வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத் தொகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் ஹாக்கி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற தமிழக ஹாக்கி வீரர்கள் ரூபிந்தர்சிங், ஸ்ரீஜேஷ் ஆகியோருக்கு அவர் இந்தப் பரிசுத் தொகையை அறிவித்தார்.