கண்காட்சிக்கான விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பேராசிரியர் பீர்முகமது கூறியதாவது: பண்ணைத் தொழிலில் உற்பத்தி செலவைக்குறைத்து லாபம் அளிக்கும் வகையில் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.
தொழிலாளர் பற்றாக்குறையை போக்க. நவீன கருவிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதை விவசாயிகள் அறிந்து கொள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை சார்பில், மதுரையில் ஆக. 1, 2ல் மெகா கண்காட்சி நடக்கிறது. குடும்ப பண்ணையம் மூலம் லாபகரமான கால்நடை, கோழி வளர்ப்பு கண்காட்சியில் தொழில்நுட்ப விரிவுரை, செயல்விளக்கம், உழவர் விவாதம், புதிய ரகங்கள் அறிமுகம், பண்ணைக் கருவிகள், மதிப்பூட்டப்பட்ட உற்பத்தி பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் இடம்பெறும். இக்கண்காட்சியில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்ட விவசாயிகள் பங்கேற்கலாம் என்று கூறினார்.