சீன பட்டாசுகள் தமிழகத்துக்குள் கடத்தி வரப்படுவதால் சிவகாசியிலும் மற்றும் பிற பகுதிகளிலும் பட்டாசு தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இது குறித்து தமிழக முதல்வர், பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிமுக உறுப்பினர் தமிழில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு தமிழிலேயே பதிலளிக்க மத்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் அனுமதியைக் கோரினார். சபாநாயகர் அனுமதியளித்ததைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் புரட்சித்தலைவி அம்மா அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றது. இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழிலேயே பதிலளித்தார். மக்களவையில் கேள்வியும் பதிலும் தமிழிலேயே இடம் பெற்றது இதுவே முதல் முறையாகும்