அக்டோபர் 10

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty)

death_fanlty

2002 மே 13 இல் ரோம் நகரில் கூடிய ‘‘மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு என்ற அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2003 அக்டோபர் 10 மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.

“மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்புஎன்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தற்போது மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. குற்றம் புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் மிகக் கொடுமையான தண்டனையான மரண தண்டனையைக் கொண்டுள்ள சில நாடுகளும் அதைக் கைவிட வேண்டும் என்ற நோக்கிலே ‘‘மரண தண்டனை எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.